ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர். அவர் தன்னுடன் இஞ்சினியரிங் கல்லூரியில் ஒன்றாகப் படித்த ராஜவேலு என்பவரை பல ஆண்டுகளாகவே காதலித்து வருகிறார். ராஜவேலு தற்போது ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார்.
தனது காதலரைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரியா அவருடன் அங்கு சுற்றி வந்ததைப் பற்றி ஒரு பதிவிட்டுள்ளார். “சிட்னி….பிராக்டிக்கலாக எனது இரண்டாவது வீடு. இங்கு வந்த மில்லியன் வருகைகளில் தற்போதுதான் அதை நிறுத்தி கவனித்துள்ளேன். இந்த இடம் எவ்வளவு அழகான, கனிவான மக்கள் உள்ள இடம். சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு இதயம் நிறைந்த அன்புடனும் நன்றியுடனும் மீண்டும் இந்த நகரத்திற்கு வந்துள்ளேன். எங்கள் விருப்பமான சிறிய இடமான மலேசியன் என்ற இடத்தில் நீண்ட தூரம் நடந்தோம், காபி குடித்தோம், பேசினோம், சிரித்தோம், நகரம் ஒளிர்வதைப் பார்த்தோம், அமைதியில் அமர்ந்தோம், அந்த தருணத்தை எங்களுக்கு வழங்கியதற்காக பிரபஞ்சத்திற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரியாவுக்கு சில வருடங்களில் திருமணம் நடந்தால் இரண்டாவது வீடான சிட்னியில் தான் செட்டில் ஆவார் போலிருக்கிறது.