தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழில் மிருகம், ஈரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆதி. இவரும் டார்லிங் உள்ளிட்ட பல படங்கள் நடித்த நிக்கி கல்ராணியும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் நேற்று இரவு மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்கள். அப்போது கோயில் வளாகத்துக்குள் வந்த அவர்களை கண்டதும் அங்கு கூடிய பக்தர்கள் அடையாளம் கண்டு கொண்டு அவர்களுடன் போட்டிப்போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்துள்ளார்கள்.
அதையடுத்து அங்கு நின்ற காவலர்கள் ஆதி - நிக்கி கல்ராணி ஆகிய இருவரையும் பாதுகாப்புடன் கோயிலுக்குள் அழைத்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்திருக்கிறார்கள். அப்போது அவர்களுக்கு கோயில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.