இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சினிமா பிரபலங்கள் பலரும் சுற்றுலா என்றால் வெளிநாடுதான் செல்வார்கள். நம் நாட்டில் உள்ள பல இடங்களுக்கும் அவர்கள் சென்றால் அந்த இடங்களும் ஓரளவிற்கு பிரபலமாகும். ஆனால், வேறு வெளிநாடுகளுக்குச் சென்று அந்த இடங்களைப் பிரபலமாக்குகிறார்கள் சிலர்.
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா வித்தியாசமாக நம் நாட்டிலேயே சுற்றுலா சென்றுள்ளார். வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மலைப் பிரதேசமான சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அதன் புகைப்படங்களை சிலவற்றைப் பகிர்ந்து, “சிக்கிம் இதுவரை... மிகவும் சாகசமாக உள்ளது!!! காங்டாக்கிலிருந்து லாச்சுங்கிற்குச் செல்ல திட்டமிட்டோம், ஆனால் நிலச்சரிவு காரணமாக, சாலைகள் தடைபட்டன, அதற்கு பதிலாக பெல்லிங்கிற்குச் சென்றோம், அது இப்போது சிக்கிமில் எனக்குப் பிடித்த இடமாகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
வட கிழக்கு மாநிலங்களுக்கு நமது மக்கள் சுற்றுலா சென்றால் அந்த மாநிலங்களும் வளர்ச்சி பெறும். ஆண்ட்ரியாவைத் தொடர்ந்து மேலும் சில சினிமா பிரபலங்கள் இதைச் செய்தால் நல்லது.