தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஒருவழியாக கொரட்டாலா சிவா இயக்கத்தில் தான் நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அதேப்போல நடிகர் மோகன்பாபு தனது மகன் விஷ்ணு மஞ்சு மற்றும் காஜல் அகர்வால் நடித்துள்ள 'மொசகல்லு' படத்தை தயாரித்து, புரமோஷன் நிகழ்ச்சிகளையும் நடத்தி விட்டார். வரும் மார்ச்-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இதை தொடர்ந்து சிரஞ்சீவி, மோகன்பாபு இருவரும் கோடை விடுமுறையாக சிக்கிம் கிளம்ப தயாராகி விட்டார்கள். இவர்கள் இருவரையும் ஒருசேர புகைப்படம் எடுத்து அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு. மேலும், “நண்பர்கள் இருவரும் ஒன்றாக கிளம்பிவிட்டார்கள்.. நீங்கள் மட்டும் ஜாலியாக கிளம்புகிறீர்களே, குழந்தைகளாகிய எங்களையும் ஏதாவது ஒருநாள் அழைத்து செல்லக்கூடாதா..?” என ஏக்கத்துடன் கேட்டுள்ளார்.