தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் உடன் ‛தக் லைப்' படத்தில் நடிக்கிறார். இதுதவிர அவரது தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு பேண்டஸி கலந்த சரித்திர படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். அதாவது, ஒப்பந்தப்படி தனது தயாரிப்பில் நடிக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த விவகாரத்தில் சிம்புவிற்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, ‛‛கமல் உடன் தக் லைப் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி. உண்மையை பேசுபவர்களே இந்த உலகத்தில் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். நான் நிறைய உண்மை பேசியிருக்கிறேன். எனக்கு ரெட் கார்ட் எல்லாம் விதிக்கப்படவில்லை. சின்ன பிரச்னை இருந்தது, அதுவும் பேசி தீர்க்கப்பட்டது'' என்றார்.