ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே |

பெங்களூருவில் கடந்த மாதம் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் போதை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலரும் அதில் கலந்து கொண்டனர். காவல்துறையினர் நடத்திய ரத்தப் பரிசோதனையில் பலர் போதை பொருள் உட்கொண்டது தெரிய வந்தது.
அந்த பார்ட்டியில் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியதாக நடிகை ஹேமா மீது குற்றம் சாட்டப்பட்டது. முதலில் அவர் அதை மறுத்தார். ஆனால், ரத்த பரிசோதனையில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது.
அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பெங்களூரு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஜூன் 1ம் தேதியே அவர் ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அவர் விசாரணைக்கு வந்தார். அப்போது அவரைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரிடம் பலதரப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
பின் அவரை மீண்டும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகை ஹேமா கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.