ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஆந்திர மாநில அரசியலில் புதிய மாற்றத்தை சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஏற்படுத்தியுள்ளனர். மொத்தம் உள்ள 175 சட்டசபை தொகுதிகளில் பாஜகவுடன் இணைந்த அவர்களது கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், பவன் கல்யாணின் ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இக்கூட்டணியின் முன்னணி நிலவரம் வந்த உடனேயே சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துகளை சொல்ல ஆரம்பித்தனர்.
எப்போதுமே சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் ஆகியோரை விமர்சிக்கும் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூட நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார். சந்திரபாபு நாயுடுவைக் கிண்டலடித்து திரைப்படம் கூட எடுத்தவர் ராம் கோபால் வர்மா. நேற்று அவரை பவன் ரசிகர்கள் கடுமையாகக் கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
அடுத்து பவன் கல்யாணின் உறவினரான அல்லு அர்ஜுனும் ரசிகர்களின் கிண்டலுக்குத் தப்பவில்லை. இந்தத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் கட்சி சார்பில் நந்தியால் தொகுதியில் போட்டியிட்ட அவருடைய நண்பர் ரவிசந்திர கிஷோர் என்பவருக்காக பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில் ரவிசந்திர கிஷோர், தெலுங்கு தேச வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.
நேற்று, பவன் கல்யாண் வெற்றிக்காக அல்லு அர்ஜுன் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அவரது பதிவில் பவன் ரசிகர்கள் பலரும் அவரது நண்பரின் தோல்விக்கும், அல்லு அர்ஜுனின் நிலைப்பாட்டிற்கும் கிண்டலடித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.