தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு இணையான முன்னணி நடிகராக நடித்து வந்தவர் நடிகர் சுரேஷ்கோபி. இடையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியலில் கவனம் செலுத்திய அவர் சினிமாவில் ஒரு பெரிய இடைவெளியை விட்டார். தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் படங்களில் நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அதே சமயம் அரசியலிலும் தீவிர கவனம் செலுத்தி வந்த சுரேஷ் கோபி, சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதுவரை கேரளாவில் பா.ஜ.,விற்கு எம்.பி.,க்களே இல்லை என்கிற நிலையில் முதன்முதலாக அந்த பெருமையையும் பெற்றுத் தந்துள்ளார் சுரேஷ்கோபி.
அவரது வெற்றிக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகரும் சுரேஷ்கோபியும் நண்பருமான மம்முட்டி, சுரேஷ்கோபி நடிக்க உள்ள அடுத்த படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிக்கிறது என்கிற அறிவிப்பை சூட்டோடு சூடாக வெளியிட்டு தனது வாழ்த்துகளை சுரேஷ்கோபிக்கு தெரிவித்துள்ளார். இந்த படத்தை யார் இயக்க உள்ளார்கள், மேலும் இதில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் யார் என்பதெல்லாம் இனிவரும் நாட்களில் தான் தெரிய வரும்.