ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பிசியாக இருக்கிறார் தான்யா ஹோப். கடந்த ஆண்டு அவர் நடித்த கப்சா (கன்னடம்), கிக், லேபிள், குலசாமி ஆகிய 4 படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு ரணம், அறம் தவறேல், வல்லான், கோல்மால் படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்து முடித்துள்ள 'வெப்பன்' படம் நாளை வெளிவர இருக்கிறது. இதில் அவர் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். மில்லியன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை குகன் சென்னியப்பன் எழுதி இயக்கியுள்ளார்.
சத்யராஜ் வசந்த் ரவி, ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை, யாஷிகா ஆனந்த், மைம் கோபி, கனிஹா, கஜராஜ், சையது சுபன், பரத்வாஜ் ரங்கன், வேலுபிரபாகரன், மாயா கிருஷ்ணன், ஷியாஸ் கரேம், பெனிட்டோ பிராங்க்ளின், ரகு எசக்கி, வினோதினி வைத்தியநாதன், மேக்னா சுமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்க, பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இதில் நடித்திருப்பது குறித்து தான்யா ஹோப் கூறியிருப்பதாவது: இயக்குனர் இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னபோது, முதலில் என் மனதில் வந்தது, நடிகர்கள் சத்யராஜ், ராஜீவ் மேனன், வசந்த் ரவி மற்றும் பல பெரிய நடிகர்களுடன் இணைந்து பணிபுரிகிறேன் என்பதுதான். இதுவரை நான் நடித்தப் படங்களில் இருந்து இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நான் செய்யாத வித்தியாசமான ஒன்று. என்னுடையது மட்டுமல்ல, படத்தில் நடித்திருந்த எல்லோருடைய கதாபாத்திரங்களுமே வலுவானதாக இருக்கும். நிறைய சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். வில்லன்கள் என்னை கட்டிவைத்து டார்ச்சர் செய்யும் காட்சிகளில் கஷ்டப்பட்டு நடித்தாலும் இப்போது அதை திரையில் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. வலிகளுக்கு பின்னால்தான் இனிமை என்பதை என்னால் உணர முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.