இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தற்போது நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், ஹிமாச்சல் பிரதேசம் மாநிலம் மாண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். அதில் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யா சிங்கை வீழ்த்தி, 52.9 சதவீத ஓட்டுகளுடன் முதல் தேர்தலிலேயே வெற்றிப் பெற்று எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில், டில்லிக்கு செல்வதற்காக சண்டிகர் விமான நிலையம் வந்த கங்கனா ரணாவத்தை, விமான நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட சி.ஐ.எஸ்.எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் காவலர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் குறித்து கங்கனா ஏதோ கருத்து தெரிவித்ததாகவும், இதனால் பெண் காவலாளி கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து கங்கனா ரணாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எப் பெண் காவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்தவரின் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. அவரை பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். எம்.பி.,யாக வெற்றி பெற்றுள்ள கங்கனா ரணாவத்தை அறைந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.