குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

மறைந்த திமுகவின் முன்னாள் தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கருணாநிதியின் வரலாற்று புகைப்பட கண்காட்சி சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டது.
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர் ஜீவா அவருடன் சென்று இந்த கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கருணாநிதி பற்றி நிறைய கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் இங்கு வந்து பார்க்கும் போது, சினிமாவைத் தாண்டி முதல்வராக அவர் செய்ததைப் பார்க்க முடிந்தது. கிட்டதட்ட 40 வருஷம் மக்களுக்காக பணி செய்திருக்கார். அதை ரொம்ப அழகாக இங்கு வைத்துள்ளனர். வெளிநாட்டில் மியூசியம் இருப்பது போல் இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. குறிப்பாக ஹாலோகிராமில் கலைஞர் பேசியது சிறப்பாக இருந்தது என்றார்.
கருணாநிதியின் வாழ்க்கை சினிமாவாக எடுக்கப்பட்டால் அதில் நடிப்பீர்களா? என்ற கேட்டபோது “கண்டிப்பாக நடிப்பேன். அதுவும் கருணாநிதியாககூட நடிப்பேன். காரணம் தெலுங்கில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை படத்தில் நடித்த அனுபவம் இருக்கிறது. கருணாநிதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதைவிட வெப் தொடராக எடுப்பதே சிறந்தது. காரணம் அவரது வாழ்ககையை இரண்டரை மணி நேர சினிமாவுக்குள் சொல்லிவிட முடியாது” என்றார்.