இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
இந்திய அளவில் பிரபலமான சமையல் கலைஞராக வளர்ந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் நடித்தும் சின்னத்திரையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமும் தற்போது மேலும் பிரபலமாகியுள்ள மாதம்பட்டி ரங்கராஜ், அண்மையில் தனது வாழ்க்கை பயணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில், 'சிறுவயதில் பள்ளி சீருடை கூட எடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். பல நாட்கள் சீருடை அணியாமல் சென்று முட்டி போட்டிருக்கிறேன். இன்று விலையுயர்ந்த விதவிதாமன ஷூ, கார் எல்லாம் வாங்குகிறேன். சிறுவயதில் எதையெல்லாம் தேவையில்லை என்று நினைத்தேனோ அதையெல்லாம் வாங்கி பயன்படுத்துகிறேன். இன்று நான் இவ்வளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் சிறுவயதில் ஏற்பட்ட ஆசை தான்.
சிறுவயதில் என் பள்ளிக்கு அருகில் சினிமா ஷூட்டிங் நடந்தது. அதில் நெப்போலியனும் சுகன்யாவும் கலந்து கொண்டனர். அப்போது பலரும் சென்று நெப்போலியனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். எனக்கும் அன்புடன் நெப்போலியன் என்று அவர் கையெழுத்து போட்டுக் கொடுத்தார். அன்று அவரை சுற்றி பலரும் நின்றது போல் என்னைச் சுற்றியும் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதுதான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது' என்று கூறியுள்ளார்.