வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய். இப்படத்தில் அவருடன் பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால் விஜய் அரசியல் களத்திற்கு முழுமையாக இறங்க தயாராகி விட்டதால் அவரது 69வது படம் டிராப் ஆகிவிட்டதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. இது குறித்து விஜய் வட்டாரங்களில் விசாரித்தபோது, கோட் படத்தை முடித்துவிட்டு விஜய் அரசியல் பணிகளில் இறங்கி விட்டது உண்மைதான். என்றாலும் இந்த ஆண்டுக்குள் 69வது படத்திலும் நடித்து கொடுத்து விட்டுதான் அவர் முழு நேர அரசியலில் ஈடுபட போகிறார். அரசியல் கதையில் உருவாகும் விஜய்யின் 69 வது படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.