தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

சினிமாவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் சூழல் ஒரு காலகட்டத்தில் உருவாகி விடும். இரண்டாம் பாகம் வெற்றி பெறும் போது அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இயல்பாகவே ஆர்வம் வந்துவிடும். அப்படி தமிழில் காஞ்சனா(முனி சீரிஸ்), அரண்மனை ஆகிய படங்கள் நான்கு பாகங்களை தொட்டுவிட்ட நிலையில் தெலுங்கிலும் இதேபோல ஒரு வெற்றி படத்திற்கு மூன்றாவது பாகம் எடுக்கும் முயற்சி துவங்கியுள்ளது.
கடந்த 2019-ல் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்த எப்-2 திரைப்படம் வெளியானது. குடும்பப் பின்னணியில் காமெடி கலாட்டாவாக உருவான இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ல் இதன் இரண்டாம் பாகமாக எப்-3 திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் ஓரளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக எப்-4 படம் உருவாக இருக்கிறது என்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பாகங்களிலும் தொடர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி தான் இந்த மூன்றாம் பாகத்திலும் இடம் பெற இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளாராம்.