ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
சினிமாவைப் பொறுத்தவரை அது எந்த மொழியானாலும் ஒரு படம் மிகப்பெரிய வெற்றி பெற்று விட்டால் அதற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்கும் சூழல் ஒரு காலகட்டத்தில் உருவாகி விடும். இரண்டாம் பாகம் வெற்றி பெறும் போது அடுத்தடுத்த பாகங்களை உருவாக்க இயல்பாகவே ஆர்வம் வந்துவிடும். அப்படி தமிழில் காஞ்சனா(முனி சீரிஸ்), அரண்மனை ஆகிய படங்கள் நான்கு பாகங்களை தொட்டுவிட்ட நிலையில் தெலுங்கிலும் இதேபோல ஒரு வெற்றி படத்திற்கு மூன்றாவது பாகம் எடுக்கும் முயற்சி துவங்கியுள்ளது.
கடந்த 2019-ல் வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா, மெஹ்ரீன் பிர்ஸாடா இணைந்து நடித்த எப்-2 திரைப்படம் வெளியானது. குடும்பப் பின்னணியில் காமெடி கலாட்டாவாக உருவான இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கடந்த 2022-ல் இதன் இரண்டாம் பாகமாக எப்-3 திரைப்படம் வெளியானது. அந்தப் படமும் ஓரளவுக்கு வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகமாக எப்-4 படம் உருவாக இருக்கிறது என்றும் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு பாகங்களிலும் தொடர்ந்த அதே நட்சத்திரக் கூட்டணி தான் இந்த மூன்றாம் பாகத்திலும் இடம் பெற இருக்கிறது. இரண்டு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் அனில் ரவிபுடி தான் இந்தப் படத்தையும் இயக்க உள்ளாராம்.