ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் நடந்து முடிந்து லோக்சபா தேர்தலில் ஹிமாசல் பிரதேசம், மாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி., ஆகி உள்ளார். கோவை ஈஷா மையம் வந்த அவர் மூன்று நாட்கள் ஈஷா யோகா மையத்தில் தங்கியிருந்து ஆதியோகியை தரிசனம் செய்தார். பின்னர் நேற்று இரவு டில்லி புறப்பட்டு சென்றார்.
கங்கனா கூறுகையில், ‛‛எனது கேங்ஸ்டர் படம் வெளியானது முதல் என்னை அரசியலில் இணைய அணுகினார்கள். எனது குடும்பத்தில் உள்ள முன்னோர்கள் அரசியலில் இருந்துள்ளனர். அரசியல் வாழ்வில் மக்களுடன் என்னை தொடர்புப்படுத்தி கொண்டு தொடர்ந்து அதில் முன்னேறி செல்வேன். சினிமாவை விட அரசியல் எளிதானது அல்ல. படம் பார்க்க போனால் நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் அரசியல் அப்படியல்ல, பிரச்னைகள் உள்ளவர்கள் மட்டுமே அரசியல்வாதிகளை பார்க்க செல்வார்கள்'' என்கிறார்.