சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியவர் தமிழ் இயக்குனரான அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையைக் கூட அவர் அல்லு அர்ஜுனிடம் சொல்லிவிட்டார் என்றார்கள்.
இந்நிலையில் அந்தப் படத்தைத் தற்போது 'டிராப்' செய்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கட்ட நிலையிலேயே இப்படம் டிராப் ஆனதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் வெளிவந்த பிறகுதான் அல்லு அர்ஜுனின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியுமாம். ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் ரவி கிஷோருக்காக அவர் செய்த பிரச்சாரம் காரணமாக கடும் கமெண்ட்டுகள் வெளியானது. அது அல்லு அர்ஜுனின் எதிர்வரும் படங்களில் எப்படி எதிரொலிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.