பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியாகி திரை ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் மகாராஜா. இதில், ஜோதி கதாபாத்திரத்தில் நடித்திருந்த சஞ்சனா நமிதாஸிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதல் படத்திலேயே அருமையாக நடித்துவிட்டதாக பலரும் வாழ்த்தி வருகின்றனர். ஆனால், சஞ்சனாவுக்கு கேமரா புதிதல்ல. ஏற்கனவே கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான 1947 என்கிற படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சஞ்சனா 6 மாத குழந்தையாக இருக்கும் போதே மெட்டி ஒலி சீரியலில் நடித்திருக்கிறார். அதன்பின் தொடர்ச்சியாக குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்துள்ள சஞ்சனா, கண்ணான கண்ணே, செங்கலம் உள்ளிட்ட சில தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சனா தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என தனது விருப்பத்தை பேட்டிகளில் தெரிவித்து வருகிறார்.