இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித்குமார், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டில்தான் ஆரம்பமாகி நடந்தது. ஆனால், ஓரிரு மாதங்களாக படப்பிடிப்பு நடக்கவில்லை. அது குறித்து பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன.
அஜித் அடுத்து நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்பில் வேறு கலந்து கொண்டதால் 'விடாமுயற்சி' குறித்து பல சந்தேகங்களும் வெளியானது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று படக்குழு மூலம் தெரிய வந்தது.
தற்போது படத்தின் நாயகன் அஜித் குமார் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் புறப்பட்டுச் சென்றுள்ளார். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தி படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என அடுத்த கட்ட வேலைகளும் விறுவிறுப்பாக நடக்கப் போகிறது என்கிறார்கள்.