இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி பகுதியில் நடைபெற்ற நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்துகொண்டார். நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நெல் திருவிழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நெல் திருவிழாவில் சிவகார்த்திகேயனுக்கு ‛உழவர்களின் தோழன்' விருது வழங்கப்பட்டது. விழாவில் அவர் பேசியதாவது: மாபெரும் மனிதர்கள் நம்மாழ்வார் அய்யா ஆரம்பித்து வைத்ததை நெல் ஜெயராமன் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி சத்தம் இல்லாமல் ஒரு பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். 174 பாரம்பரிய நெல் விதைகளை மீட்டு எடுத்து, இன்னைக்கு அது எல்லாரும் திரும்ப வந்து பயிர் செய்கிற மாதிரியான ஒரு சூழ்நிலையை அவங்க ரெண்டு பேரும் ஏற்படுத்தி இருக்காங்க. அவங்களுக்கு என்ன திருப்பி செஞ்சாலும் அது பத்தாதுன்னு நினைக்கிறேன். அவங்க ரெண்டு பேரும் விதைத்திருக்கிற இந்த எண்ணம், இந்த திருவிழா எல்லாமே அடுத்து வர பல தலைமுறைகளுக்கானது.
மக்களோடு மக்களாக இருந்த என்னை இப்படி மேடை ஏற்றி அழகு பார்க்கிறீர்கள். எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. இந்த விருதை கொடுத்ததுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. சில விருது மகிழ்ச்சியை கொடுக்கும், சில விருது சந்தோஷம் கொடுக்கும், சில விருது உங்களுக்கு புகழை கொடுக்கும். அப்படியான விருதாக இதை நான் பார்க்கிறேன். இந்த விருதுக்கு எவ்வளவு தகுதியானவன்னு எல்லாம் எனக்கு தெரியவில்லை. ஏன்னா ஒரு விவசாயி தன்னை மட்டும் பார்க்காமல் எந்த கஷ்டம் இருந்தாலும் வெளியே சொல்லிக் கொள்ளாமல் உழைக்கிறார். விவசாயி என்ற அந்த வார்த்தையே ரொம்ப பவர்புல்லான ஒரு வார்த்தை.
‛உழவர்களின் தோழன்' என்ற இந்த விருதை நான் இன்னும் பெரிய பொறுப்பா பாக்குறேன். இதற்காக என்னால் இயன்றதை கடைசி வரைக்கும் ஏதாவது ஒரு வகையில் செய்வேன் என்பதை மட்டும் இந்த மேடையில் என்னால உறுதியாக சொல்ல முடியும். கடந்த முறை இந்த திருவிழாவில் பங்பேற்ற இயக்குனரும் நடிகருமான சசிகுமார், இந்த விழாவை தமிழகத்தின் பல ஊர்களில் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதையே தான் நானும் கேட்டுக்கொள்கிறேன். இந்த நெல் திருவிழாவை தமிழகத்தில் பல பகுதிகளில் நடத்த வேண்டும். அங்கும் நான் வந்து கலந்துகொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.