இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நாக் அஸ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் இந்த வாரம் ஜூன் 27ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இப்படத்திற்காக மும்பையில் மட்டுமே ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பிரபாஸ், தீபிகா, அமிதாப், கமல் ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். அதற்கடுத்து ஐதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இப்படத்திற்காக புரமோஷன் நிகழ்ச்சிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எங்குமே நடைபெறவில்லை.
இதனிடையே, பிரபாஸ் ஓய்வெடுப்பதற்காக ஐரோப்பாவிற்கு சென்றுவிட்டதாகவும் தகவல். இரண்டு வாரங்கள் வரை அங்கேயேதான் தங்கியிருக்கப் போகிறாராம்.
கமல்ஹாசன் இந்தப் படத்தில் நடித்தும் கூட சென்னையில் எந்த நிகழ்வும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. பான் இந்தியா படம் என்று சொல்லிவிட்டு மும்பையோடு நிறுத்திக் கொண்டுள்ளது தெலுங்கு திரையுலகத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொந்த மாநிலத்திலேயே தயாரிப்பாளர், இயக்குனர், நாயகன் எந்த விழாவையும் நடத்தாமல் போய்விட்டார்கள்.