ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
நடிகை பார்வதியை பொருத்தவரை வழக்கமான சினிமா பார்முலாப்படி நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் கமர்ஷியல் நடிகையாக மாறி இருப்பார். ஆனால் செலெக்ட்டிவான கதைகளையும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் கடந்த வெள்ளி அன்று மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம்.
இந்த படத்தில் அவர் பெரிய அளவில் பிரபலம் இல்லாத இரண்டு நடிகர்களுக்கு ஜோடியாக ஒப்புக்கொண்டு நடித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் திருமண உறவை மீறி செயல்படும் ஒரு பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் பார்வதி. கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இவர் எப்படி ஒப்புக் கொண்டார் என பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட பார்வதி இந்த படத்தில் தான் நடித்தது குறித்து ஒரு ஆச்சரியமான தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த கதை என்னிடம் வந்த போது இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா, அதற்கு நியாயம் செய்ய முடியுமா என்கிற சந்தேகமும், தயக்கமும் என்னிடம் இருந்தது. அதனால் நான் ஆரம்பத்தில் நடிக்க மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து இதே கதை மீண்டும் என்னிடமே வந்தது. அப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு எனக்கு பக்குவமும் புரிதலும் ஏற்பட்டிருந்ததால், நம்பிக்கையுடன் சரி என சம்மதம் சொல்லிவிட்டேன். முதல் ஒரு வாரம் இந்த படப்பிடிப்பில் நடித்தபோது இன்னும் இந்த கதாபாத்திரத்திற்கு என்னுடைய நடிப்பால் வலு சேர்க்க வேண்டும் என்கிற என் உணர்வும் ஏற்பட்டது. படத்தில் நடித்து முடிக்கும் வரை பல சவால்களை எதிர்கொள்ளவும் வேண்டி இருந்தது” என்று கூறியுள்ளார்.