ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
காது கேட்க முடியாத, வாய் பேச முடியாத ஸ்ரீஹரி என்ற இளைஞர் 'சூரியனும் சூரிய காந்தியும்' என்ற படத்தின் மூலம் கதை நாயகன் ஆகியுள்ளார். இந்த படத்தை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். ரிதி உமையாள் நாயகியாக நடித்துள்ளனர். அப்புகுட்டி, விக்ரம் சுந்தர், சந்தான பாரதி, செந்தில்நாதன், ராஜசிம்மன், மங்களநாத குருக்கள், அழகு, சேஷு உள்பட பலர் நடித்துள்ளனர். திருவாரூர் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.எஸ்.ரவிபிரியன் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஏ.எல்.ராஜா கூறும்போது “சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்ற பாரதியாரின் பாடலே கதையின் மைய கரு. சூரியன் மேல் கொண்ட சூரியகாந்தி பூவின் காதலை போல ஹீரோவும், ஹீரோயினும் காதலிக்கிறார்கள். அந்த காதலுக்குள் ஜாதி என்கிற பேய் நுழைந்து என்னவெல்லாம் செய்கிறது என்பதுதான் படத்தின் கதை” என்றார்.
ஏற்கெனவே கேட்பு திறன், பேசும் திறன் இல்லாத அபிநயா ‛நாடோடிகள்' படத்தில் இருந்து தொடர்ந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.