ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இப்போதெல்லாம் ஓடாத படத்திற்கு வெற்றி விழா கொண்டாடுவதும், பல கோடி வசூல் என்று போலி விளம்பரம் செய்வதும் அதிகரித்துள்ளது. இது மலையாள சினிமாவில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியான 'மஞ்சுமல் பாய்ஸ்' படம் 200 கோடிக்கு மேல் வசூலித்ததாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமே விளம்பரம் செய்தது. ஆனால் சிராஜ் என்பவர் “நான் இந்த படத்தின் தயாரிப்புக்கு 7 கோடி கொடுத்தேன், 200 வசூலித்தவர்கள் என் பணத்தை திருப்பித் தரவில்லை” என்று புகார் அளித்தார்.
இதனால் தற்போது அமலாக்கத்துறையினர் மலையாள சினிமாக்களின் உண்மையான வரவு, செலவை கண்காணிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மலையாள தயாரிப்பாளர் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு ரகசிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது.
அதில் “பாக்ஸ் ஆபீஸ் வசூலை அதிகரித்துக் காட்டி, ஒட்டுமொத்த திரைப்பட துறைக்கும் தீங்கு விளைவிக்கும் ஆரோக்கியமற்ற நடைமுறையில் ஈடுபட வேண்டாம். சில தயாரிப்பாளர்கள் படம் வெளியான சில நாட்களுக்கு பல்க் புக்கிங் செய்து, பார்வையாளர்களை கவர பொய்யான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணத்துக்காக பொய்யான திரைவிமர்சனங்களை வெளியிடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.