ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்ற பிறகு ஆஸ்கரின் கவனம் இந்திய சினிமாவின் பக்கம் திரும்பியது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய கலைஞர்களும் ஆஸ்கர் விருது பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஆஸ்கர் விருதுகளை தீர்மானிக்கும் ஆஸ்கர் அகாடமி கமிட்டியில் தற்போது 487 புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இந்திய கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர்.
புதிய உறுப்பினர் பட்டியலில் இயக்குனர் ராஜமவுலி, நடிகை ஷபனா ஆஸ்மி, 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரஷீத், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் மற்றும் ராஜமவுலி மனைவி ரமா, ரிமா தாஸ் உள்ளிட்ட பலர் இடம்பெற்று உள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற 19 பேரும், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 71 பேரும் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
புதிய உறுப்பினர்களையும் சேர்த்து ஆஸ்கார் அகாடமியில் இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 910 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்றும் 56 நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.