வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நேஷனல் கிரஷ் என்று ரசிகர்களால் மட்டுமல்ல திரையுலகை சேர்ந்தவர்களாலேயே அழைக்கப்படும் அளவிற்கு புகழ்பெற்ற தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடந்த வருடம் வெளியான அனிமல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார் ராஷ்மிகா.
நடிப்பால் மட்டுமல்ல அவரது க்யூட்டான செயல்பாடுகளாலும் ரசிகர்களிடம் எந்தவித பந்தாவும் இன்றி பழகுவதாலும் ராஷ்மிகாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் அதிகமாகி வருகிறது. அதை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அவரும் அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். அதுமட்டுமல்ல ரசிகர்களை குஷிப்படுத்த அவ்வப்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் சில வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்கா ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் அவர் தனது தாய் மொழியான கொடவா பாஷையில் பேசியிருந்தார். கர்நாடகாவில் குடகு மலை பகுதியில் சேர்ந்த கூர்க் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராஷ்மிகா. அதேசமயம் அவர் பேசிய பாஷை புரியாத பல ரசிகர்கள் இது என்ன பாஷை, எந்த ஊர் மொழி என குழப்பத்துடன் கமெண்ட்டுகளை பதிவிட்டனர்.
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக ராஷ்மிகா கூறும்போது, “நீங்கள் அனைவரும் குழம்பி விட்டீர்கள் என்று தெரிகிறது. இது என்னுடைய தாய் மொழியான கொடவா பாஷை. குடகு பகுதியில் தான் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே.. என் வாழ்க்கை முழுவதும் எப்போதும் கொடவா பாஷையை பேசிக் கொண்டிருப்பேன். பேசும்போதே எவ்வளவு அழகாக ஒலிக்கிறது பாருங்கள்” என்று கூறியுள்ளார்.