ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! |

சந்திரமுகி-2, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது ‛பென்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார் ராகவா லாரன்ஸ். மேலும் விரைவில் காஞ்சனா படத்தின் நான்காம் பாகத்தை அவர் இயக்கப் போவதாக செய்திகள் வெளியாகி வந்த நிலையில், கதை எழுதும் பணிகள் நடந்து வருகிறது என்று அவ்வபோது கூறி வந்தார் லாரன்ஸ். இந்த நிலையில் சமீபத்தில் காஞ்சனா-4 படத்தில் மிருணாள் தாக்கூர் நாயகியாக நடிப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு செய்தி வைரலானபோது அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், காஞ்சனா-4 படம் குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது லாரன்ஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில், தற்போது பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தில் நடித்து வருகிறேன். அதோடு காஞ்சனா-4 படத்தின் கதைப் பணிகளும் முடிந்து விட்டது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் காஞ்சனா -4 படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறியுள்ளார் ராகவா லாரன்ஸ்.