தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

‛கல்கி 2898 ஏடி, சன் ஆப் சர்தார் -2' படங்களுக்கு பிறகு தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் மிருணாள் தாக்கூர். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், தான் புதிதாக பென்ஸ் கார் வாங்கி இருப்பதாக கூறியுள்ளார். அதற்கான காரணம் குறித்து அவர் கூறுகையில், ‛‛நாங்கள் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களது குடும்பத்தில் உள்ள சிலர் கார் வைத்திருக்கிறார்கள். அதில் ஒருவர், எனது அம்மாவை தனது காரில் ஏற்ற மறுத்தார். இது எங்களுக்கு மிகப்பெரிய அவமானம் ஆகிவிட்டது.
அதனால் கண்டிப்பாக நாமும் ஒருநாள் சொந்தமாக கார் வாங்கி அதில் என் அம்மாவை உட்கார வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதன்படி இப்போது நான் பென்ஸ் கார் வாங்கி இருக்கிறேன். எங்கள் குடும்பத்திலேயே நாங்கள் மட்டும் தான் பென்ஸ் கார் வைத்திருக்கிறோம். இந்த காரில் என் அம்மாவை அமர வைத்து நான் பெருமையாக ஓட்டி செல்கிறேன்'' என்று தெரிவித்திருக்கிறார் மிருணாள் தாக்கூர்.