இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 திரைப்படம் நாளை (ஜூலை 12) வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் இயக்குனர் ஷங்கர், நடிகர்கள் கமல், சித்தார்த் ஆகியோர் ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். கேரளா சென்று இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர்களில் மறைந்த மலையாள குணச்சித்திர நடிகர் நெடுமுடி வேணுவும் ஒருவர். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்துள்ளார்.
கொச்சியில் நடைபெற்ற இந்த புரமோஷன் நிகழ்வில் நெடுமுடி வேணு பற்றி கமல் பேசும்போது, “மலையாள திரையுலகில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக நெடுமுடி வேணு இருந்தார். இன்று நான் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.. அவர் ரொம்பவே ஈசியாக கதாநாயகனாக நடித்துவிட்டு சென்றிருக்கலாம். ஆனாலும் ஒரு சிறந்த குணசித்திர நடிகராக அவர் இருந்தார். இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கூட அவருக்கு உடல் நலக்குறைவு பாதிப்பு இருந்தது. அந்த சமயத்தில் என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்த படம் வெளியான பிறகு இதை நாம் எப்படி கொண்டாட வேண்டும் என்று நாங்கள் இருவரும் பேசினோம். இன்று இந்த இடத்தில் நான் நிற்கும்போது அவரும் இங்கே என் அருகில் இருப்பதாகவே உணர்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் கமல்.