இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
‛அறிந்தும் அறியாமலும், பட்டியல்' உள்ளிட்ட படங்களின் மூலம் இயக்குனராக முன்னேறிய விஷ்ணுவர்தன், அஜித்தை வைத்து இயக்கிய ‛பில்லா' படத்தின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார். அதன்பிறகு மீண்டும் அவரை வைத்து ‛ஆரம்பம்' என்கிற வெற்றி படத்தையும் கொடுத்தார். அதை தொடர்ந்து மீண்டும் ஒரு வெற்றி படத்தை கொடுக்க முடியாமல் தடுமாறி வரும் விஷ்ணுவர்தன் தற்போது நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷை கதாநாயகனாக அறிமுகப்படுத்தி ‛நேசிப்பாயா' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு பக்கம் ஏற்கனவே ஹிந்தியில் படம் இயக்கியுள்ள விஷ்ணுவர்தன் அடுத்ததாக சல்மான்கானை வைத்து படம் இயக்கப் போகிறார் என்றும் கரன் ஜோஹரின் நிறுவனத்தில் ஒரு படம் இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வந்தன. இது பற்றி தற்போது மனம் திறந்துள்ள இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறும்போது, “இப்படி வெளியான இரண்டு செய்திகளுமே உண்மைதான். ஆனால் என்னை பொருத்தவரை இந்த படங்கள் துவங்கி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து ரிலீஸுக்கு வரும்போது தான் அதை ரியாலிட்டியாக நம்ப முடியும். இப்போதைக்கு நேசிப்பாயா படம் தான் ரியாலிட்டி” என்று கூறியுள்ளார்.