திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
தனுஷ் நடிக்கும் 50வது படமான 'ராயன்' நாளை மறுநாள் ஜூலை 26ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாகி உள்ளது. தான் நடிக்கும் 50வது படத்தை தானே இயக்கியுள்ளார் தனுஷ். ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
பட வெளியீட்டை முன்னிட்டு நேற்று தங்களது குலதெய்வக் கோவிலுக்குச் சென்று தனுஷ் வழிபாடு நடத்தியுள்ளார். கோயிலில் அமர்ந்து தியான நிலையில் பிரார்த்தனையும் செய்துள்ளார்.
தேனி அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் உள்ள கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோயில் தான் அவர்களது குலதெய்வம். தனுஷின் மகன்கள், அண்ணன் செல்வராகவன், அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா, அம்மா, இரண்டு சகோதரிகள் என குடும்பத்தினர் அனைவரும் நேற்று வழிபாடு நடத்தியுள்ளனர்.