தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது மனதில் தோன்றும் கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாம் பிறக்கும்போதே கை கால் தலை போன்று இன்னொரு விஷயமும் கூடவே பிறந்திருக்கிறது. அதுதான் பொறாமை. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை. பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை. அலுவலகத்தில் ஒருவருக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டால் அதை பார்த்து பொறாமை . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரி. உங்கள் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். இந்த பொறாமை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது என்று கேட்டீர்கள் என்றால், வாழவே முடியாது. இதற்கு தீர்வு மருந்தும் கிடையாது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதேபோல் பொறாமையை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அதோட பவரும் ஜாஸ்தியாகி கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் பொறாமையை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆமாம் உன்னை பார்த்தது நான் பொறாமைப்படுகிறேன். நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையை கவனித்தால் கொஞ்சநாளில் மேஜிக் போல இந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் செல்வராகவன்.