தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். நடிகர் சங்க செயலாளராக இருக்கும் இவர், கடந்த 2017-19 காலக்கட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகித்தார். இந்த காலக்கட்டத்தில் சங்கத்தில் இருந்த ரூ.12 கோடி நிதியை முறைகேடாக செலவழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக அந்த தொகையை அவர் திருப்பி தர சொல்லி தற்போதைய சங்கத்தில் உள்ள நிர்வாகிகள் பலமுறை தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் விஷால் இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால், இனி விஷாலை வைத்து புதிய படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினை கலந்தாலோசித்து அதன்பின் தங்களது பணிகளை துவங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இந்த முடிவை எடுத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.