தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

33வது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் துவங்கி உள்ளது. ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று நடந்த துவக்க நாள் விழாவில் நடிகர் சிரஞ்சீவி அவருடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். சிரஞ்சீவி, அவரது மனைவி சுரேகா, மகன் ராம் சரண், மருமகள் , பேத்தி உபாசானா, பேத்தி கிலின் காரா ஆகியோருடன் லண்டன் சென்று அங்கு ஓய்வெடுத்து வந்தார்கள்.
அங்கிருந்து பாரிஸ் சென்று ஒலிம்பிக்ஸ் துவக்க நாள் விழாவில் கலந்து கொண்ட சிரஞ்சீவி மனைவி சுரேகாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ஒலிம்பிக்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. சுரேகாவுடன் ஒலிம்பிக்ஸ் ஜோதியின் பிரதியை வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணம். எங்களின் பெருமைமிகு இந்தியக் குழுவின் ஒவ்வொரு வீரரருக்கும், எல்லாவற்றிலும் மிகச் சிறந்த பதக்கப் பட்டியலைப் பெற வாழ்த்துகிறோம், கோ இந்தியா, ஜெய்ஹிந்த்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
சிரஞ்சீவியின் மருமகளும், ராம்சரண் மனைவியுமான உபாசானா சில வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.