ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கவுதம் மேனன் முதல் முறையாக மலையாளத்தில் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். நடிகர் மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் மம்முட்டி தான் கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிகளிலும் படம் இயக்கச் செல்லும் இயக்குனர்கள், தங்களுடன் ஏற்கெனவே இருக்கும் உதவி இயக்குனர்களையும் அழைத்துச் செல்வர். மற்ற மொழிகள் தெரியாத இயக்குனர்கள் அந்த மொழி தெரிந்த உதவி இயக்குனர்கள் சிலரையும் புதிதாக வேலைக்கு வைத்துக் கொள்வார்கள்.
ஆனால், நடிகர் மம்முட்டி இந்த விஷயத்தில் கவுதம் மேனனுக்கு கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையிலிருந்து கவுதம் மேனனின் உதவி இயக்குனர்கள் யாரும் வரக் கூடாது என்று சொல்லிவிட்டாராம். மலையாளத் திரையுலகத்திலிருந்து உதவி இயக்குனர்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் இங்குள்ள தமிழ் சினிமா இயக்குனர்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.