அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தற்போது ஈகை என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் அஞ்சலி. இது அவரது ஐம்பதாவது படமாகும். அதையடுத்து ராம் இயக்கி உள்ள ஏழு கடல் ஏழு மலை, ஷங்கரின் கேம் சேஞ்சர் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் . இந்த நிலையில் தெலுங்கில் கேங்ஸ் ஆப் கோதாவரி என்ற ஒரு படத்தில் விலைமாது ரோலில் நடித்திருந்த அஞ்சலி, தற்போது பாஹிஷ்கரனா என்ற தெலுங்கு வெப் தொடரிலும் புஷ்பா என்ற கேரக்டரில் கவர்ச்சியாக நடித்திருக்கிறார். இந்த தொடர் ஜி5 ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. அதோடு மூன்று நாளில் 35 மில்லியன் பேர் இதை பார்த்துள்ளார்கள்.
இதை அடுத்து சோசியல் மீடியாவில் ஒரு பதிவு போட்டுள்ளார் அஞ்சலி. அதில், ஜி5 ஓடிடி தளத்தில் மூன்று நாளில் 35 மில்லியன் என்பது சாதாரண விஷயம் அல்ல. அதேபோல் புஷ்பா என்ற அந்த ரோலில் நடித்தது சவாலானது தான் என்றாலும் எனக்கு அந்த சவால் மிகவும் பிடித்திருந்தது. எங்களது கதைக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு மிகப்பெரிய நன்றி. நீங்கள் தரும் இதுபோன்ற ஆதரவு தான் என்னை மேலும் மேலும் புதிய கேரக்டர்களில் நடிக்க தூண்டும் வகையில் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் அஞ்சலி.