தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

முன்னனி நடிகர்களின் வாரிசுகள் தாங்களும் தந்தையை போன்று பெரிய நடிகராக வேண்டும் என்று கிளம்பிக் கொண்டிருக்கும்போது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மட்டும் இயக்குனராக கிளம்பி விட்டார். திரைப்படம் தொடர்பான படிப்பை வெளிநாட்டில் முடித்தவர் சஞ்சய். இயக்கம், நடிப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் தொழில்நுட்பம் என அனைத்தையும் படித்தார். ஆனால் முதலில் படம் இயக்க விரும்புவதாக அவர் தெரிவித்தவுடன் விஜய் அதற்கு முழு சம்மதம் தெரிவித்ததுடன், யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன். நீயாகவே வாய்ப்பு தேடிக் கொள்ள வேண்டும். நீயாகவே முன்னுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு பல முன்னணி நிறுவனங்களிடம் கதை சொன்னார். இறுதியாக லைகா நிறுவனம் சஞ்சயை டிக் அடித்தது. லைகா நிறுவனம் 'இந்தியன் 2' மற்றும் 'விடாமுயற்சி' படங்களில் பிசியாக இருந்தால் சஞ்சய் இயக்கும் படத்தை தள்ளி வைத்தது. இதனால் படமே டிராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் பரவின. சமீபத்தில் சஞ்சய்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததன் மூலம் படத்தை உறுதி செய்தது லைகா.
தற்போது சஞ்சய் படத்தின் பணிகளை தொடங்கி இருக்கிறார். இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் யகனாக நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். முழு விபரங்களுடன் முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.