இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய் கட்சி சார்பில் போட்டியிட அவரிடம் சீட் கேட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் புகழின் உச்சியில் இருக்கும்போதே இனிமேல் நடிக்க வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம். இப்படி எத்தனை பேர் செய்வார்கள். அரசியலிலும் அவர் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் கட்சியை அறிவித்தபோது அவரை படப்பிடிப்பில் சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன். கட்சி தொடங்கும் அறிக்கை வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன். கடைசி படம் என்று குறிப்பிடும்போது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் கட்சி தொடங்குவதால் மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். கட்சி பெயர் நன்றாக இருக்கிறது என்று கூறி தேர்லில் போட்டியிட எனக்கு ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி விட்டு வந்தேன். என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.