திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார். விஜய் கட்சி சார்பில் போட்டியிட அவரிடம் சீட் கேட்டதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: விஜய் புகழின் உச்சியில் இருக்கும்போதே இனிமேல் நடிக்க வேண்டாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று அரசியலுக்கு வருவது ரொம்ப பெரிய விஷயம். இப்படி எத்தனை பேர் செய்வார்கள். அரசியலிலும் அவர் வெற்றி அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அவர் கட்சியை அறிவித்தபோது அவரை படப்பிடிப்பில் சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன். கட்சி தொடங்கும் அறிக்கை வெளியிட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது என்று கேட்டேன். கடைசி படம் என்று குறிப்பிடும்போது வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் கட்சி தொடங்குவதால் மகிழ்ச்சியாக இருந்ததாக சொன்னார். கட்சி பெயர் நன்றாக இருக்கிறது என்று கூறி தேர்லில் போட்டியிட எனக்கு ஒரு சீட் கொடுங்க என்று சொல்லி விட்டு வந்தேன். என்று கூறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.