இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கேரளாவில் பெய்த பெரும் மழையால் வயநாடு மற்றும் அதை சுற்றி உள்ள ஊர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் மண்ணோடு மண்ணாக புதைந்ததால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கேரளா மாநிலத்திற்கு உதவ பலரும் முன் வந்துள்ளனர். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விக்ரம் தனது பங்கிற்கு முதல் ஆளாய் ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு இதை வழங்கி உள்ளார்.
கடந்த 2018-லும் கேரளாவில் ஏற்பட்ட மழை பாதிப்பின் போது விக்ரம் ரூ.35 லட்சம் நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரமை தொடர்ந்து மேலும் பல தமிழ் திரைப் பிரபலங்களும் நிதி உதவி அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.