இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பழம்பெரும் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ். தேனினும் இனிய பாடல்களை பாடியவர். ஆனால் இவர் ஒரு கவிஞர் என்பது பலருக்குத் தெரியாது. 'பிரணவம்' என்கிற கவிதை தொகுப்பை எழுதி வெளியிட்டார். இந்த தொகுப்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் வெளியானது. 8 மொழிகளிலும் அவரே கவிதைகளை எழுதி இருந்தார். இது தவிர 2 லட்சம் கவிதை வரை எழுதியிருப்பதாக அவரே கூறியிருக்கிறார்.
எந்த விழாவுக்கோ, திருமண நிகழ்வுக்கோ சென்றால். அந்த இடத்திலேயே அந்த விழா தொடர்பாகவோ அல்லது திருமண தம்பதிகளை வாழ்த்தியோ கவிதை எழுதி அங்கேயே வாசிப்பார். காதல் கவிதை, தத்துவ கவிதை, பக்தி கவிதை என தனி தனி கவிதைகளை தனி தனி வண்ண பேனாவில் எழுதுவார். இதனால் தனது சட்டைப் பையில் வண்ண வண்ண பேனாக்களை சொருகி வைத்திருப்பார்.
இதுதவிர 'நவநீதசுமசுதா' என்ற புதிய ராகத்தை கண்டுபிடித்தார். ஏற்கெனவே உள்ள 7 ராகங்களோடு இந்த ராகத்தையும் இணைத்து 'அஷ்டராகமாலிகா'வில் ஒரு பாடல் எழுதினார். இந்த பாடலை டி.கே.பட்டம்மாள் பாடினார்.