திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், தியேட்டர் அதிபர் சங்கம் அடங்கிய கூட்டுகுழு கூட்டத்தில் அதிரடியாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் விஷால், தனுஷ் ஆகியோருக்கு கட்டுப்பாடு விதிப்பது மாதிரியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் வருகிற 4ம் தேதி கூடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தலைவர் நாசர் தலைமையில் கூடும் இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதில் தயாரிப்பாளர் சங்கம் நடிகர் தனுஷ் மீது விதித்துள்ள தடை மற்றும் கூட்டுகுழு கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து விவாதித்து அதிரடியான பல அறிவிப்புகளை வெளியிட இருக்கிறார்கள்.