ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

ஓடிடி வந்த பிறகு உலக சினிமாக்கள் நமது வீட்டுக்குள்ளேயே வர ஆரம்பித்துவிட்டன. அதுபோல நமது சினிமாக்களும் வெளிநாடுகளில் உள்ளவர்களின் வீட்டுக்குள்ளும் சென்று சேர்கின்றன.
ஹாலிவுட், கொரியன் அதிகமாகப் பார்க்கும் நமது ரசிகர்களைப் போல, இந்தியத் திரைப்படங்களை அதிகமாகப் பார்க்கும் ரசிகர்களும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். 'பாகுபலி 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்கள் வெளிநாடுகளில் ஏற்படுத்திய தாக்கம் இதற்கு முக்கியக் காரணம் என்பதை மறுக்க முடியாது.
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் மாதம் வெளிவந்து வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் 100 கோடி வசூலைக் கடந்த படம் 'மகாராஜா'. இப்படம் ஓடிடி தளத்தில் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகி உள்ளது.
மற்ற இந்திய மொழிகளில் பெற்ற வரவேற்பை விடவும் வெளிநாடுகளில் உள்ள ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று. சமூக வலைத்தளங்களில் இந்தப் படத்தைப் பாராட்டி பல வெளிநாட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அதில் வெளிநாட்டு ரசிகை ஒருவர் “ஒரு அப்பாவின் அன்பு… யார் வேண்டுமானாலும் அப்பா ஆகலாம். ஆனால், அதற்குத் தகுதியா ஒருவர் மட்டும்தான் இருப்பாங்க,” என்று நெகிழ்ச்சியாக அவர் குறிப்பிட்டுள்ளது பலரையும் லைக் செய்ய வைத்துள்ளது.