ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிரபலமாக உள்ளார். அவரது இசையில் உருவாகி வரும் 'தேவரா' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சுட்டாமலே' சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அப்பாடல் பிரபல சிங்களப் பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலின் காப்பியாக உள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர். சிங்களத்தில் வெளியான அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு பாடல்.
இந்நிலையில் சிங்களப் பாடலுக்கு இசையமைத்த சமத் சங்கீத், இந்த காப்பி சர்ச்சைக்குப் பதிலளிக்கும் விதத்தில், “அனிருத்தின் படைப்புகளை எப்போதும் ரசிப்பவன். என்னுடைய பாடலான 'மணிகே மகே ஹிதே' பாடலைப் போன்ற ஒரு பாடலை இசையமைக்க அவருக்கு தூண்டுகோலாக எனது பாடல் அமைந்தது எனக்கு மகிழ்ச்சிதான்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதனால், இந்த காப்பி சர்ச்சைக்கு சம்பந்தப்பட்டவரே இப்போது முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.