ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அஜய் ஞானமுத்து - அருள்நிதி கூட்டணியில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் ‛டிமான்டி காலனி'. இவர்கள் கூட்டணியில் இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்துள்ளார். வரும் ஆக., 15ல் படம் ரிலீஸாகிறது. தினமலர் இணையதளத்திற்கு அருள்நிதி அளித்த பேட்டி :
‛‛டிமான்டி காலனி 2 படம் வெறும் பிசினஸிற்காக மட்டும் பண்ணவில்லை. நிறையமுறை அஜய்யிடம் இந்த படம் பண்ணுவது பற்றி கேட்டுள்ளேன். அவரும் நிச்சயம் பண்ணுவோம், கொஞ்சம் பொறுங்க என்பார். பிறகு ஒருநாள் அவரே ஒரு சின்ன லீடு கிடைச்சுருக்கு என கூறி அதை ஒரு முழு கதையாக உருவாக்கினார். மேலும் எனது உதவியாளர் வெங்கி இயக்குவார், நான் தயாரிக்கிறேன், படம் முழுக்க நான் கூட இருப்பேன் என்றார். பட அறிவிப்பும் வந்தது. பிறகு வெங்கி தான் அஜய்யே இயக்கட்டும் என்று சொன்னார்.
டிமான்டி காலனி 2 படம் மேக்கிங்கிற்காகவே பேசப்படும். பெரிய வெற்றியை தரும் என நம்புகிறேன். இந்த படத்தின் முடிவில் மூன்றாம் பாகத்திற்கான லீடும் உள்ளது. அதன்பின் 4ம் பாகம் வரை இந்த படம் செல்லும். அதற்குமேல் போகாது. எங்களுடன் தங்கலான் உள்ளிட்ட படங்கள் வந்தாலும் டிமான்டி காலனி படத்திற்காக ரசிகர்கள் உள்ளனர். அந்த நம்பிக்கையிலும், விடுமுறை வருவதாலும் ரிலீஸ் செய்கிறோம்.
என்னை தேடி வரும் கதைகளை மட்டும் தான் நடிக்கிறேன். யாரிடமும் போய் வாய்ப்பு கேட்டதில்லை. அதேசமயம் என்னை வைத்து படம் எடுத்த பாண்டிராஜ், அஜய் போன்ற இயக்குனர்களுடன் கதை இருக்கா என கேட்டுள்ளேன். புது இயக்குனர்களை வைத்து நான் படம் தயாரிக்க ஆசைப்படுகிறேன். அதற்கு கொஞ்சம் காலம் ஆகும்.
ஒருவேளை நான் சினிமாவிற்கு வரவில்லை என்றால் நிச்சயம் பிசினஸ் தான் செய்திருப்பேன். தாத்தாவின் எந்த கதையையும் என்னால் செய்ய முடியுமா என தெரியவில்லை. சரியாக செய்யவில்லை என்றால் எங்க வீட்டிலேயே திட்டுவாங்க. அதனால் அதனை ரசித்து போவதே நல்லது. அரசியலுக்கு யாரும் வேண்டுமானாலும் வாங்க, போங்க என்னை ஆள விடுங்க. எனக்கு இதில் எந்த கருத்தும் இல்லை''.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.