ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்கு திரையுலகின் பிரபல ஹீரோவான நாகார்ஜூனாவின் மகன் நாகசைதன்யா தற்போது இளம் முன்னணி நடிகராக படங்களில் நடித்து வருகிறார். இவரும் நடிகை சமந்தாவும் ஒன்றாக இணைந்து நடித்த போது காதல் ஏற்பட்டு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ஒரு சில வருடங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து விவாகரத்தும் பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக நாகசைதன்யாவும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகை சோபிதா துலிபாலாவும் காதலித்து வருவதாக செய்திகள் அடிபட்டு வந்தன. அது உண்மைதான் என்பது போல சமீபத்தில் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. திருமண தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த ஜோதிடர் வேணு சுவாமி என்பவர் நாகசைதன்யா - சோபிதா துலிபாலா இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் சில வருடங்களுக்குள் அவர்களுக்கு பிரிவு ஏற்படும் என்றும், அதுவும் ஒரு பெண்ணால் ஏற்படும் என்றும் தானாகவே ஜோதிடம் கணித்து கூறினார். இவரது இந்த பேச்சு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இவர் மீது தெலுங்கு திரைப்பட பத்திரிக்கையாளர் சங்கம் வாயிலாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரான நடிகர் விஷ்ணு மஞ்சு இவரை அழைத்து கண்டித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ள விஷ்ணு சுவாமி, “நான் வேண்டுமென்றே யார் மனதையும் புண்படுத்தும் விதமாக எதையும் கூறவில்லை. ஜோதிட கணிப்பை தான் கூறினேன். இனிமேல் நான் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்து என்னுடைய கணிப்பை பொதுவெளியில் கூறப்போவதில்லை” என்று கூறி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்துள்ளார்.