ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். விஜய் தீவிர அரசியலில் நுழைய இருப்பதால் விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படத்திற்கு முந்தைய படம்மாக இது உருவாகியுள்ளது. அதனால் இதை பார்த்து பார்த்து கவனமாக உருவாக்கி இருக்கிறார் வெங்கட் பிரபு.
13 ஆண்டுகளுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற வெற்றி படத்தை கொடுத்தார். அப்போது மங்காத்தா, வேலாயுதம் படப்பிடிப்புகளில் இருந்த விஜய் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார் வெங்கட்பிரபு.
அந்த சமயத்திலேயே வெங்கட் பிரபுவிடம் அஜித் நீங்கள் விரைவிலேயே விஜய் படம் ஒன்றை இயக்க வேண்டும் என்று கூறினாராம். ஆனால் அந்த வாய்ப்பு கையில் வந்து சேர்வதற்கு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்று கூறியுள்ள வெங்கட் பிரபு, கோட் படம் குறித்து அஜித் கூறிய விஷயம் ஒன்றையும் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இந்த கோட் திரைப்படம் மங்காத்தாவை விட 100 மடங்கு அதிகம் இருக்கும் விதமாக உருவாக்குங்கள் என்றும் விஜய் தீவிர அரசியலுக்குள் நுழைய இருப்பதால் அவரை திரையுலகில் இருந்து கம்பீர வெற்றியுடன் வழி அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அஜித் தன்னிடம் கேட்டுக் கொண்டார் என்றும் கூறியுள்ளார் வெங்கட் பிரபு.