ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
அந்தக்கால காமெடி நடிகர்களில் ஒருவர் டி.எஸ்.துரைராஜ். பாய்ஸ் நாடக குழுவில் இருந்த அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அவரால் பிரபலமான நடிகராக முடியவில்லை. என்றாலும் திருநீல கண்டர், சகுந்தலை படங்களில் இவரது காமெடி நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தது.
ஒரு கட்டத்தில் 'மரகதா பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சில படங்களை தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் ஏமாற்றம் தந்ததால் கடும் பொருளாதார சிக்கலில் மாட்டினார். இறுதியாக தானே ஒரு படத்தை தயாரித்து இயக்கினார். அதுதான் 'பானை பிடித்தவன் பாக்கியசாலி'.
இந்த படத்தில் சோலோ ஹீரோயினாக சாவித்ரி நடித்தார். அவருடன் டி.எஸ்.துரைராஜ், கே.பாலாஜி, ஆர்.நாகேஸ்வரராவ், டி.பி.முத்துலட்சுமி, வி.எஸ்.ராகவன், அங்கமுத்து உள்பட பலர் நடித்திருந்தார்கள். கமல்கோஷ் என்கிற வங்க மொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்திருந்தார். 1958ம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. டி.எஸ்.துரைராஜ் தனது பொருளாதார சிக்கலை தீர்த்தார்.