இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்த கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகை ரோஜாவும் நகரி தொகுதியில் தோல்வி அடைந்தார். ஜெகன் மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்த ரூ.110 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக அப்போதே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் விளையாட்டு போட்டி நடத்தியதில் ரோஜா ரூ.100 கோடி ஊழல் செய்ததாக விளையாட்டு அமைப்பு தலைவர் பிரசாத் மாநில அரசுக்கு கடந்த ஜூன் 11ம் தேதி புகார் மனு அனுப்பினார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்த விஜயவாடா போலீஸ் கமிஷனருக்கு அரசு உத்தரவிட்டது.
தற்போது இந்த விசாரணை தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து ரோஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ரோஜா கைதாகும் வாய்ப்புள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதல் கட்டமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரோஜாவுக்கு சம்மன் அனுப்பப்பட இருப்பதாக தெரிகிறது.