இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
முன்னணி நடிகரான அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்க விரும்பிய இவர் 'பட்டத்து யானை' படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானர். இந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மகள் நடிக்க அர்ஜூன் தமிழ், கன்னடத்தில் ஒரு படம் தயாரித்தார். இந்த படம் தமிழில் 'சொல்லிவிடவா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பிரேம பர்ஹா' என்ற பெயரிலும் வெளியானது. இந்த படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதேபோல தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி 'அதாகப்பட்டது மக்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வரவேற்பை பெறவில்லை தொடர்ந்து திருமணம், தண்ணிவண்டி படங்களில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மகனுக்காக தம்பி ராமய்யா தயாரித்து இயக்கிய படம் 'மணியார் குடும்பம்'. இதுவும் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில்தான் உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தாலும் இவருக்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆசை முடியவில்லை. இதனால் தற்போது இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்க அர்ஜூன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை அர்ஜூன் தயாரிக்க மட்டுமே செய்கிறார், இயக்குவது ஒரு அறிமுக இளம் இயக்குனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அர்ஜூன் தற்போது தனது சகோதரி மகன் துருவா சார்ஜா நடித்துள்ள பான் இந்தியா படமான 'மார்ட்டின்'-னுக்கு கதை எழுதி உள்ளார். இதை ஏபி அர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார். அக்., 11ல் படம் ரிலீஸாகிறது.