சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். இடையில் தனிப்பட்ட வாழ்வில் அவர் சந்தித்த பிரச்னைகளால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். தற்போது மீண்டும் முழு மூச்சாக படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் பிரசாந்த் நடித்து வெளிவந்த 'அந்தகன்' திரைப்படம் பிரசாந்தை மீண்டும் வெற்றி பாதைக்கு திருப்பியது. இதனால் பிரசாந்த் மீண்டும் உற்சாகமாக உள்ளார்.
தற்போது விஜய்யுடன் இணைந்து ' தி கோட்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் பேசியதாவது, " இனி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 படங்கள் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளேன். குறிப்பிட்ட இயக்குனர்களுடன் மட்டும் நடிக்காமல் அனைத்து இயக்குனர்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் "என பேசியுள்ளார்.