தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சினிமாவில் தோல்வி என்பது சகஜமான ஒன்று. தற்போதெல்லாம் ஆண்டுக்கு 250 படங்கள் வெளிவருகிறது. ஆனால் 25 படங்கள்தான் வெற்றி பெறுகிறது. தமிழ் சினிமாவின் முதல் தோல்வி படம் என்று 1939ம் ஆண்டு வெளிந்த 'பிரஹலாதா' என்கிறார்கள் சினிமா வரலாற்று ஆசிரியர்கள். தெலுங்கில் 1932ம் ஆண்டு வெளிவந்த 'பக்த பிரஹலாதா' படத்தை தழுவி இது உருவானது.
பி.என்.ராவ் இயக்கி இருந்தார். டி.ஆர்.முத்துராமலிங்கம், எம்.ஆர்.சாந்தலட்சுமி, ஆர்.பாலசுப்ரமணியம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். எம்ஜிஆர் இந்த படத்தில் இந்திராவாக சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். சாமா சகோதரர்கள் இசை அமைத்திருந்தார்கள். ஷியாம் கோஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தமிழில் வெளிவந்த 6வது பேசும் படம் இது. அப்போது பரவலாக தமிழ்நாட்டில் பிரஹலாதா கதை நாடகமாக நடத்தப்பட்டு வந்தது. சில தொழில்நுட்ப கோளாறுகளால் அதற்கு ஈடாக இந்த படம் அமையாததே தோல்விக்கு காரணம் என்கிறார்கள். சேலம் சங்கர் பிலிமிஸ் என்ற நிறுவனம் தயாரித்தது. முதலில் வெளியூர்களிலும், பின்னர் சென்னையிலும் வெளியான படம்.